சென்னை கடற்கரையில் பேருந்து மோதி குதிரை பலி

சென்னை மெரினா கடற்கரை சாலை ஒருவழிப் பாதையில் குதிரை மீது தனியார் பேருந்து மோதியது.

Update: 2019-02-08 02:24 GMT
சென்னை மெரினா கடற்கரை சாலை ஒருவழிப் பாதையில் குதிரை மீது தனியார் பேருந்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குதிரை பலியானது. குதிரையை ஓட்டி வந்த சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த ராஜி என்பவர் பலத்த காயங்களுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, கொத்தவால்சாவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்