இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

அரசுப் பேருந்து மோதி, ஊனமடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால், பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2019-02-07 03:21 GMT
அரசுப் பேருந்து மோதி, ஊனமடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால், பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. வேலூர் மாவட்டம், கொணவட்டத்தை சேர்ந்த அம்ஜத் என்பவருக்கு, 4 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற ஆணையின் படி வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து எடுத்து சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்