இளைஞர் கழுத்து அறுத்து கொலை : இருவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது...
இளைஞர் கொலை செய்ய்யப்பட்ட வழக்கில் கைதான இருவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
திருவிடைமருதூர் அருகே ஆவணியாபுரத்தை சேர்ந்த முன்தஜீர் என்ற இளைஞரை, அவரது பள்ளி நண்பர் இஜாஜ் அகமது என்பவர், காதல் தகராறு காரணமாக சக நண்பர்களுடன் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதனை தொடர்ந்து இசாஜ் அகமது மற்றும் அவரது நண்பர் ஜலாலுதீனை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.