அட்டகாசம் செய்த குரங்கு பிடிபட்டது - மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே அட்டகாசம் செய்துவந்த குரங்கை 48 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் பிடித்தனர்.

Update: 2019-02-03 00:25 GMT
நாகை மாவட்டம் சீர்காழி அருகே அட்டகாசம் செய்துவந்த  குரங்கை 48 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் பிடித்தனர். தென்னலக்குடி கிராமத்திற்குள் புகுந்த குரங்கு ஒன்று வீடுகளில் இருந்த பொருட்களை  நாசப்படுத்தியது. வீட்டில் இருந்த குழந்தை மற்றும் முதியவரை குரங்கு கடித்து காயப்படுத்தியது. இதனையடுத்து மருத்துவ குழுவினருடன் வந்த வனத்துறையினர், குரங்கிற்கு மயக்க ஊசி போட்டு மடக்கி பிடித்தனர். மயக்கம் அடைந்த குரங்கின் கையை கட்டி வனத்துறையினர் எடுத்து சென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்