ஊக்கத்தொகை வழங்கி முன்னாள் மாணவர்கள் அசத்தல் : மாணவர்கள் முயற்சியால் புத்துயிர் பெரும் பள்ளி

குடியரசு தினத்தை முன்னிட்டு, அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கி முன்னாள் மாணவர்கள் அசத்தியுள்ளனர்.

Update: 2019-01-26 11:40 GMT
கொச்சாலூரில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை குறைந்ததை தொடர்ந்து, அப்பள்ளி மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனை அறிந்த முன்னாள் மாணவர்கள், பள்ளிக்கு புத்துயிரூட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கி, ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கியுள்ளனர். இதேபோல், தனியார் பள்ளிக்கு நிகராக பல சிறப்பம்சங்களை மேற்கொள்ள முன்னாள் மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்