மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - வேறு மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்ற 14 பேர் மனு

சென்னை அயனாவரம் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை, வேறு மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2019-01-24 21:45 GMT
சென்னை அயனாவரம் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை, வேறு மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். 17 பேர் கைது செய்யப்பட்ட இந்த வழக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால், வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். வழக்கை பிப்ரவரி 7-ம் தேதிக்குள் முடிக்கும் நோக்கில் விசாரணை நடப்பதாகவும், தங்கள் தரப்பு நியாயங்களை கேட்கவில்லை என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்