போக்குவரத்து போலீசார் மீது நீதிபதி குற்றச்சாட்டு

பணியின் போது செல்போன் பார்க்கின்றனர் - நீதிபதி

Update: 2019-01-22 22:00 GMT
பணியின் போது செல்போன் பார்க்கும் போக்குவரத்து அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து வரும் 30-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்குகளை விசாரிக்க தொடங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சிக்னல்களில் நிற்கும் போக்குவரத்து போலீசார் பணியைச் செய்யாமல் செல்போனில் பேசிக்கொண்டும், வாட்ஸ் ஆப் பார்த்துக்கொண்டும் இருப்பதாக குற்றம்சாட்டினார். தாமே நேரில் பார்த்ததாக  கூறிய அவர், இதை டிஜிபி மற்றும் மாநகர காவல் ஆணையருக்கு கவனத்துக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனவரி 30-ம் தேதிக்குள் தெரிவிக்கும்படியும் அவர் உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்