"வானம் நம்மை சோதிக்கிறது" - வறட்சி குறித்து அமைச்சர் பாஸ்கரன் வேதனை
சிவகங்கையில் வேளாண்மைத்துறை சார்பில் வேளாண் பயிர்களின் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது.;
சிவகங்கையில் வேளாண்மைத்துறை சார்பில் வேளாண் பயிர்களின் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இவ்விழாவில் கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், அரசு விவசாயத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தாலும் மழை இல்லாமல் வானம் நம்மை சோதித்து வருகிறது என்றார்.