பெல் நிறுவன ஊழியர்கள் உண்ணா விரதம்

திருச்சி பெல் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள மாற்றம் குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், சிஐடியு உள்ளிட்ட நான்கு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-01-21 09:18 GMT
திருச்சி பெல் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள மாற்றம் குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், சிஐடியு உள்ளிட்ட நான்கு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக பேச்சுவார்த்தையின் போது, ஒருசில தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கையெழுத்து போட மறுத்த தொழிலாளர்கள் அனைவரும் வெளியேறி, பெல் நிறுவனத்திற்கு முன்னால் அமர்ந்து உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்