வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 10 சவரன் தாலி பறிப்பு

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 10 சவரன் தாலி பறிப்பு

Update: 2019-01-20 02:22 GMT
சென்னையில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், மர்ம நபர் ஒருவர் தாலி செயினை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர் அஞ்சுகம் நகரில், வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ரயில்வே அலுவலர்  ஜம்புலிங்கம். இவரின் மனைவி வசந்தா, வீட்டில் தனியாக இருந்த போது, மர்ம நபர் ஒருவர் ஜன்னலை கழற்றிவிட்டு, வீட்டிற்குள் நுழைந்துள்ளார். வசந்தா கழுத்தில் இருந்த 10 சவரன் தங்க சங்கிலியை திருடிக் கொண்டு அந்த நபர் தப்பியோடினார். 
Tags:    

மேலும் செய்திகள்