உலக சாதனைக்காக நொண்டியடித்தபடி ஓட்டப் பந்தயம்

திருவண்ணாமலை மாவட்டம் மேல்பள்ளிப்பட்டு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சாதனையில் இடம்பெற அதிக மாணவிகள் பங்குபெற்ற நொண்டி ஓட்டபந்தயம் நடைபெற்றது.

Update: 2019-01-13 04:54 GMT
திருவண்ணாமலை மாவட்டம் மேல்பள்ளிப்பட்டு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சாதனையில் இடம்பெற அதிக மாணவிகள் பங்குபெற்ற  நொண்டி ஓட்டபந்தயம் நடைபெற்றது.  இதல் 384 மாணவிகள் கலந்துகொண்டு 42 நிமிடங்களில் இந்த உலக சாதனையை படைத்துள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட 30 மீட்டர் தொலைவை, ஒரு சுற்றுக்கு 16 பேர் என மொத்தம் 24 சுற்றுகளாக மாணவிகள் நொண்டியத்தபடியே ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றனர். முதல் 3 இடங்களை பெற்ற அபினயா, மேகலா மற்றும் திவ்யா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். இந்த உலக சாதனையை எலைட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் பதிவு செய்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்