நீர் இன்றி வறண்டு கிடக்கும் வேடந்தாங்கல் ஏரி
பருவமழை பொய்த்ததால் வேடந்தாங்கல் ஏரி, நீர் இன்றி வறண்டு காட்சி அளிக்கிறது.
பருவமழை பொய்த்ததால் வேடந்தாங்கல் ஏரி, நீர் இன்றி வறண்டு காட்சி அளிக்கிறது. இதனால் இங்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பும் வெளிநாட்டு பறவைகள், அங்கிருந்து செய்யூரில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உப்பு கழிவு நீர் கால்வாய்க்கு செல்வதால் அந்த இடம் புதிய சுற்றுலாத் தளம் போல காட்சியளிக்கிறது. கூழைக்கடா, வர்ண நாரை, அரிவாள், மூக்கன்பாம்பு தாரா போன்ற ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் அங்கு வந்து குவிந்துள்ளன. அங்குள்ள நீரில் பறவைகள் நாட்டியம் ஆடுவதை அங்குள்ள மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.