கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பல்

ஆவடி அருகே எரிபொருள் விற்பனை நிலையத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கு வேலை பார்த்த கல்லூரி மாணவரை அரிவாளால் தாக்கிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-01-09 07:46 GMT
ஆவடி அருகே எரிபொருள் விற்பனை நிலையத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கு வேலை பார்த்த கல்லூரி மாணவரை அரிவாளால் தாக்கிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் கோபாலபுரத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். கல்லூரியில் படித்து வரும் இவர், அந்த பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் பகுதி நேரமாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று தங்கள் வாகனத்தில் எரிபொருளை நிரப்புமாறு புருஷோத்தமனிடம் தெரிவித்துள்ளது. ஆனால் அவர்களை வரிசையில் வருமாறு அவர் கூறியதால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், மறைத்து வைத்திருந்த அரிவாளால் அந்த மாணவனை சரமாரியாக வெட்டியது. இதையடுத்து அந்த கும்பல் ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றது. படுகாயமடைந்த புருஷோத்தமன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதை வைத்து தாக்குதல் நடத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்