"அடுத்த தலைமுறை, கட்டாயம் சமஸ்கிருதம் கற்க வேண்டும்" - அனந்த்குமார் ஹெக்டே பேச்சு

அடுத்த தலைமுறை மருத்துவர்களும், பொறியாளர்களும் சமஸ்கிருத மொழியை கட்டாயம் கற்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-06 18:44 GMT
அடுத்த தலைமுறை மருத்துவர்களும், பொறியாளர்களும் சமஸ்கிருத மொழியை கட்டாயம் கற்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற சமஸ்கிருத மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், அனைத்து அறிவுகளுக்கும் நுழைவு வாயிலாக சமஸ்கிருதம் விளங்குவதாக கூறினார்.  சமஸ்கிருதம் ஒரு விஞ்ஞான மொழி என்றும், கணினியில் பயன்படுத்துவதற்கு பொருத்தமான மொழி எனவும் மத்திய இணை அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்