கால்நடைகளுக்கு பிரத்யேக ஆம்புலன்ஸ் வாகனம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பிரத்யேக ஆம்புலன்ஸ் வாகனம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கால்நடைகள் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-04 08:05 GMT
கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பிரத்யேக ஆம்புலன்ஸ் வாகனம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கால்நடைகள் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பேரவையில் கேள்வி நேரத்தின் போது நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் கேள்விக்கு பதிலளித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும், காரியாண்டியில் முதற் கட்டமாக கால்நடை கிளை நிலையம்  அமைக்க ,தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்