வீட்டில் பழங்கால சிலைகள் பதுக்கல் வழக்கு : முன்ஜாமீன் பெற்ற கிரண்ராவ் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னையில் சிலைகளை வீட்டில் பதுக்கி வைத்து இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்ற கிரண் ராவ், இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜரானார்

Update: 2019-01-03 12:01 GMT
சென்னையில் உள்ள தமது வீட்டில் பழங்கால சிலைகளை பதுக்கி வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி கிரண்ராவ் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் கிரண் ராவ் ஆஜரானார்.இதனைத்  தொடர்ந்து, கிரண்ராவை நாளை முதல் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தினமும் தினமும் காலை 10 மணிக்கு கையெழுத்திட நீதிபதி உத்தரவிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்