சிசிடிவி கேமரா இல்லாமல் இளம்பெண்ணை கடத்திய ஆட்டோ குறித்து துப்புதுலங்குவதில் சிரமம்...

கும்பகோணத்தில் வடமாநில இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரை கடத்திச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் குறித்த துப்பு போலீசுக்கு கிடைக்கவில்லை.

Update: 2018-12-08 23:16 GMT
கும்பகோணத்தில் வடமாநில இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரை கடத்திச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் குறித்த துப்பு போலீசுக்கு கிடைக்கவில்லை. டெல்லியில் இருந்து கும்பகோணம் ரயில் நிலையம் வந்த இளம்பெண், ஓட்டோவில் ஏறியுள்ளார். அவர் கூறிய இடத்திற்கு செல்லாத ஆட்டோ ஓட்டுநர் அவரை கடத்தியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண், ஆட்டோவில் இருந்து குதித்து தப்பினார். அவரை 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இளம்பெண்ணை கடத்திய  ஆட்டோ ஓட்டுநர் யார் என போலீசார் தேடி வருகின்றனர்.. ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் இந்த நிலை என என கூறும் பொதுமக்கள், இதுகுறித்து திருச்சியிலுள்ள தெற்கு ரயில்வே மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.   
Tags:    

மேலும் செய்திகள்