தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போன் பறிமுதல் : கார் நிறுவன அதிகாரியிடம் தீவிர விசாரணை

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல முயன்ற பிரபல கார் நிறுவன அதிகாரியிடம் இருந்த சேட்டிலைட் போனை மத்திய தொழில்படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-12-08 09:18 GMT
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல முயன்ற பிரபல கார் நிறுவன அதிகாரியிடம் இருந்த சேட்டிலைட் போனை மத்திய தொழில்படையினர் பறிமுதல் செய்தனர். ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிட்சர் ஜாக்ஹன் என்னும் அந்த நபர், பிரபல கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, பிட்சர் ஜாக்ஹன், விமானநிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்