ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு...

கோவை அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2018-12-01 11:48 GMT
கோவை அருகே  ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் அருகில் உள்ள வயல்பகுதியில்  தஞ்சமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து யானையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கூட்டத்தை பிரிந்த ஒற்றை காட்டு யானை ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்