ராமநாதசுவாமி கோவில் சொத்துக்களை மீட்க கோரி வழக்கு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-11-30 02:01 GMT
திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் இலங்கையிலும் உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, இது குறித்து அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறை செயலர்கள், அறநிலையத்துறை ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்