தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்...!
கஜா புயல் தமிழகத்தை நெருங்குவதால் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;
கஜா புயல் தமிழகத்தை நெருங்குவதால் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் : கடலூரில் கடற்கரையில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை
கடலூரில் கடல் சீற்றம்
கஜா புயல் : 80-90 கிமீ வேகத்தில் காற்று வீசும்
நாகையில் கடல் சீற்றத்தால் ஆர்ப்பரிக்கும் அலைகள்
மயிலாடுதுறை தீயணைப்புத்துறை சார்பில் தீயணைப்பு வீரர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
மயிலாடுதுறையில் உள்ள 12 தீயணைப்புத்துறை மையங்கள் படகு உள்ளிட்ட அனைத்து உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நீர்வாகம் தெரிவித்துள்ளது.
19 முகாம்களில் 2572 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் உதயகுமார்
கஜா புயல் : ராமேஸ்வரத்தில் நிலைமை என்ன ?
201 குடும்பங்கள் நாகை முகாமில் தங்கவைப்பு - அமைச்சர் உதயகுமார்
கஜா புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். தாழ்வான பகுதியில் உள்ள மக்கள், பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் உடனடியாக முகாம்களுக்கு செல்ல வேண்டும் - அமைச்சர் உதயகுமார்
கஜா புயல் - மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு