முள்வேலியில் சிக்கிய மலை அணிலை மீட்ட தன்னார்வலர்கள்
முள்வேலியில் சிக்கிய மலை அணிலை தன்னார்வலர்கள் மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கொடைக்கானல் அருகே ஏரிச்சாலையில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தின் முள்வேலியில் மலை அணில் ஒன்று காயத்துடன் சிக்கிக்கொண்டது. தப்பிக்க வழியின்றி தவித்த அந்த அணிலை அந்த வழியே வந்த தன்னார்வலர்கள் லாவகமாக மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வனத்துறை அதிகாரிகள் மலை அணிலுக்கு சிகிச்சை அளித்து வனப்பகுதிகளுக்குள் விட்டனர்.