அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - தொந்தரவு அளித்த நபருக்கு தர்ம அடி

தில்லை நகர் போலீசார் தீவிர விசாரணை

Update: 2018-11-09 19:16 GMT
திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அதிமுக பிரமுகருக்கு பொதுமக்களே தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதிமுக வார்டு செயலாளர் செக்கடி சலீம் என்பவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமி, தமது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோரும் அப்பகுதி மக்களும், சலீமை சரமாரியாக தாக்கினர். தகவலறிந்த தில்லை நகர் போலீசார், சலீமை மீட்டு, காவல் நிலையத்தில் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்