கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

தமிழக கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக, சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-11-04 02:29 GMT
தமிழக கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக, சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20 சதவீதம் அளவுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டு உள்ளது. குறைந்த பட்சம் 117 ரூபாய் முதல் 16 ஆயிரத்து 963 ரூபாய் வரை, சம்பளம் உயரும். மொத்தம் 22 ஆயிரத்து 48 பணியாளர்கள் பயன் பெறுவார்கள் என முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்