ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியை மீது கொடூர தாக்குதல்

சிதம்பரத்தில் வயதான பெண்ணை கடப்பாறையால் தாக்கி நகை பணத்தை திருட முயன்றவர்களை, அப்பகுதி மக்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-10-28 21:34 GMT
* சிதம்பரம் நாட்டுபிள்ளை தெருவில் வசித்து வருபவர் ஜெயலட்சுமி. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ஆன இவரதுவீட்டுற்கு வந்த, வாகன ஓட்டுனர்களான ராஜா, கண்ணன் ஆகியோர், வீடு வாடகைக்கு 
வேண்டும் என கேட்டுள்ளனர். 

* அப்போது திடீரென கடப்பாறையால் ஜெயலெட்சுமியை தாக்கிய அவர்கள், வீட்டில் இருந்த நகை , பணத்தை திருட முயன்றுள்ளனர். ரத்தம் வடிய ஜெயலெட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, திருட முயன்ற ஓட்டுனர்களை மடக்கி பிடித்தனர். 

* பின்னர் கட்டிவைத்து சரமாரியாகபொதுமக்கள் தாக்கியதில் இருவரும் முகம் சிதைந்த நிலையில், பலத்த காயம் அடைந்தனர்.தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்