நாளை ஆயுத பூஜை பண்டிகை எதிரொலி : டீசல் விலை உயர்வால் பொரியின் விலை உயர்வு

நாளை ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொரியின் விலை மூட்டைக்கு 100 ரூபாய் உயர்ந்துள்ளது.

Update: 2018-10-17 13:30 GMT
நாளை ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொரியின் விலை மூட்டைக்கு 100 ரூபாய் உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் தயாராகும் பொரி பல மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு டீசல் விலை உயர்வு காரணமாக கர்நாடகத்தில் இருந்து கொண்டு வரப்படும் நெல்லின் விலை மூட்டைக்கு 300  ரூபாய் வரை உயர்ந்தது. இதன் காரணமாக நாமக்கல்லில் தயாரான பொரியின் விலை மூட்டைக்கு 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. விலை உயர்வு காரணமாக விற்பனை மந்தமாக உள்ளதாக பொரி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்