பிரையண்ட் பூங்கா, ரோஜா தோட்டத்தில் மேம்பாட்டு பணி

கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா மற்றும் ரோஜா தோட்டத்தில் நடைபெற்றுவரும் மேம்பாட்டு பணிகளை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் சுப்பையா தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2018-10-17 13:19 GMT
கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா மற்றும் ரோஜா தோட்டத்தில் நடைபெற்றுவரும் மேம்பாட்டு பணிகளை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் சுப்பையா தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்தப் பணிகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என அவர், ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுப்பையா, வரும் கோடை விழாவிற்கு சுற்றுலா பயணிகளை கவரும்விதமாக வண்ணத்துப்பூச்சி பூங்கா,  மாடி பூந்தோட்டம் உள்ளிட்டவை அமைக்கப்படும் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்