தாமிரபரணி மஹா புஷ்கரவிழா : சிறப்பு தபால் உறை நெல்லையில் வெளியீடு
தாமிரபரணி மஹா புஷ்கரவிழாவையொட்டி நெல்லை பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் சிறப்பு தபால் உரை வெளியிடப்பட்டது.
தாமிரபரணி மஹா புஷ்கரவிழாவையொட்டி நெல்லை பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் சிறப்பு தபால் உரை வெளியிடப்பட்டது. 144 ஆண்டுகளுக்கு பின்னர் கொண்டாடப்பட்டுவரும் தாமிரபரணி மஹா புஷ்கர நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக நெல்லை அரிய குளம் சாரதா மகளிர் கல்லூரி சார்பில் நடைபெற்ற விழாவில் இந்திய அஞ்சலகம் , தாமிரபரணி மஹா புஷ்கர விழா சிறப்பு தபால் உரையை வெளியிடப்பட்டது .இந்த உரையை நெல்லை மண்டல முதுநிலை தபால் கண்காணிப்பாளர் சாந்தகுமார் வெளியிட அதனை மகா புஸ்கர கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பக்தானந்தா மஹராஜ் பெற்றுக்கொண்டார்