நீலகிரி : குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2018-10-15 09:58 GMT
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இன்று அதிகாலை அளக்கரை குடியிருப்பு பகுதிக்குள் வந்த கரடியைக் கண்டு அச்சமடைந்த பொதுமக்கள் மற்றும்  தோட்ட தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து வனத்துறையினர் வருவதற்குள், கரடி அருகே உள்ள தோட்டத்திற்குள் புகுந்து மறைந்து கொண்டது. கடந்த ஒரு வார காலமாக இரவு நேரம் மட்டும் நடமாடி கொண்டிருந்த கரடி தற்போது பகல் நேரங்களிலும் நடமாடுவதால், கரடியை பிடிக்க வேண்டும்  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்