களைகட்டிய சீசன் - ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது சீசன் களை கட்டியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்தவண்ணம் உள்ளனர்.

Update: 2018-10-14 04:19 GMT
நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது சீசன் களை கட்டியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்தவண்ணம் உள்ளனர். தோட்டகலை பூங்காவில் 10 ஆயிரம் மலர் தொட்டிகளில் சிவப்பு, வெள்ளை, நீலம் நிறத்தால் ஆன சால்மியா மலர்களால் அருவி அமைத்திருப்பது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றது. 

கர்நாடகாவில் தசரா பண்டிகை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து உள்ளது. அரசு தாவரவியல் பூங்காவில் அமைக்கபட்டுள்ள மலர் மாடத்தில் காட்சி படுத்தபட்டுள்ள பிக்கோனியா, டேலியா, லில்லி மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து செல்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்