100 அடி உயர டவரில் ஏறி இளைஞர் போராட்டம்

கோவில்பட்டி அருகே உள்ள வடக்குதிட்டக்குளத்தில், காணாமல்போன பள்ளி சான்றிதழை மீட்டுத் தரக்கோரி இளைஞர் ஒருவர் 100 அடி உயரமுள்ள டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2018-10-12 10:45 GMT
கோவில்பட்டி அருகே உள்ள வடக்குதிட்டக்குளத்தில், காணாமல்போன பள்ளி சான்றிதழை மீட்டுத் தரக்கோரி இளைஞர் ஒருவர் 100 அடி உயரமுள்ள டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். கூலிதொழில் செய்துவரும் ஜோதி ரமேஷ் என்ற அந்த இளைஞர் மீது சில வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே காவல்துறையினர் துன்புறுத்துவதாக கூறி ஒரு முறையும், மனைவியுடன் தன்னை சேர்த்து வைக்க கோரி ஒருமுறையும் டவரில் ஏறி போராட்டம் நடத்தியுள்ள ஜோதி ரமேஷ், தற்போது மூன்றாவது முறையாக இந்த போராட்டத்தை நடத்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்