வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்திய முன்னாள் காதலன்

திருத்துறைப்பூண்டி அருகே வேறு ஒருவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை முன்னாள் காதலன் வீடு புகுந்து கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-10-07 07:20 GMT
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த நெடுபலத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்.இவரது மகளுக்கு15 நாட்களுக்கு முன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  

இந்நிலையில் சிங்காளந்தியை சோ்ந்த முத்தரசன் என்பவர், நேற்று இரவு ரவிசந்திரன் வீட்டிற்குள் புகுந்து அவரது மகளை கத்தியால் குத்தியுள்ளார். இதனை தடுக்க முயன்ற தாய்க்கும் கத்திக்குத்து விழுந்தது. 

இதில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார்,  முத்தரசனை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்