தமிழகம் முழுவதும் பரவலாக மழை...

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

Update: 2018-10-04 22:06 GMT
சென்னை மாநகரில் வடபழனி, கிண்டி, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, மீனம்பாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதியில் மழை பெய்தது. வானத்தில் கருமேகம் சூழ்ந்து, குளிர்ந்த காற்று வீசுகிறது. மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. 

ஆரணியை சுற்றியுள்ள பகுதிகளில் இடைவிடாத மழை 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக பல மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர். சாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். 
Tags:    

மேலும் செய்திகள்