நீதிபதி இருக்கையில் அரிவாளுடன் அமர்ந்த இளைஞர்...

சிவகங்கை நீதிமன்றத்தில் முனியசாமி என்பவர் திடீரென நீதிபதி இருக்கையில் அரிவாளுடன் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-10-01 21:14 GMT
சிவகங்கை நீதிமன்றத்தில் முனியசாமி என்பவர் திடீரென நீதிபதி இருக்கையில் அரிவாளுடன் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவர்,  கடந்த 2016ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் கைதாகி ஜாமீன் பெற்றுள்ளார். அதன் பின்பு வழக்கு தொடர்பாக நீண்ட காலம் ஆஜர் ஆகாததால் பிடிவாரண்ட் பிறக்கப்பட்டு வாரம் வாரம் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்றம் வந்த முனியசாமி திடீரென முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் யாரும் இல்லாத நிலையில் நீதிபதி இருக்கையில் அரிவாளுடன் அமர்ந்துள்ளார். இதனையடுத்து போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்