ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

Update: 2018-09-30 11:49 GMT
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் பல்வேறு மீனவர் சங்கங்களின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் டீசல் விலையை குறைக்க வேண்டும், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் 3 தேதி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இதேபோல் 8 தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவும் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்