உயர் நீதிமன்ற வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், மாற்று திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2018-09-26 05:08 GMT
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், மாற்று திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி இல்லாததால் மாற்றுத் திறனாளி மருத்துவர் ஒருவர், பாட்டிலில் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக அண்மையில் செய்தி வெளியானது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பறையில், மாற்று திறனாளிகள், இயற்கை உபாதைக்கு செல்லும் வகையில் தற்போது வசதி  ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்