செளசெள அறுவடை பணி தீவிரம்

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சவ் சவ் காய் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2018-09-25 20:29 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூர் மலைப்பகுதியில் சவ், சவ் காய் பயிரிடப்பட்டு வருகிறது. நடவு செய்து 6 மாதங்களில் பலன் கொடுக்கும் இந்த காய்களை பந்தல் அமைத்து விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது அறுவடையை எட்டியுள்ள நிலையில் அவற்றை மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நல்ல லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்