10 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த இரட்டை குழந்தை - குறை பிரசவத்தில் பிறந்ததால் ஒரு குழந்தை உயிரிழப்பு

திருவண்ணாமலையை சேர்ந்த தம்பதிகளுக்கு திருமணமாகி, பத்து ஆண்டுகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், குறை பிரசவம் காரணமாக ஒரு குழந்தை உயிரிழந்தது.

Update: 2018-09-25 14:57 GMT
திருவண்ணாமலையை  சேர்ந்த தம்பதிகளுக்கு திருமணமாகி, பத்து ஆண்டுகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், குறை பிரசவம் காரணமாக ஒரு குழந்தை உயிரிழந்தது. மற்றொரு குழந்தை உயிருக்கு போராடி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பாலாஜி, மோனிஷா தம்பதிகளுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 20 ஆம் தேதி ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் 7 மாதத்தில் பிறந்ததால், மிகவும் பலவீனமாக இருந்த இரண்டு குழந்தைகளுக்கும் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது .
Tags:    

மேலும் செய்திகள்