பியூஸ் மானுஷ் தாக்கப்பட்ட விவகாரம் - சிறை கண்காணிப்பாளர், காப்பாளர் மீது வழக்கு
சேலம் மத்திய சிறையில், இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சேலம் மத்திய சிறையில், இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அப்போது சேலம் மத்திய சிறையில் கண்காணிப்பாளராக இருந்த செந்தில்குமார் மற்றும் தலைமை காப்பாளர் திருநாவுக்கரசு ஆகியோர் மீது, வழக்கு பதிவு செய்ய சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.