பெண் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு..வேகமாக பரவி வரும் வீடியோ...

கோவை அருகே தனியார் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் அங்கு பணிபுரிந்த பெண் பணியாளருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-09-20 16:49 GMT
* சரவணம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும், தனியார் கல்லூரி அலுவலகத்தில் பணிபுரிந்த இளம்பெண்ணுக்கு நிர்வாக இயக்குநர், கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இது குறித்து தலைமை நிர்வாகியிடம் அந்த பெண் புகார் அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்க மறுத்த தலைமை நிர்வாகி, அந்த இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. 

* இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், கல்லூரி நிர்வாக இயக்குனர் தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்வதை செல்போன் கேமராவில் ரகசியமாக படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த கல்லூரி நிர்வாகம் அந்த இளம்பெண்ணை பணி நீக்கம் செய்துள்ளது. கல்வி நிர்வாகத்தின் இயக்குநர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தமக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த இளம்பெண் கோரிக்கை விடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்