மனநலம் குன்றிய சிறுமியை கடத்தி தொடர் பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த ஊனமாஞ்சேரியில், 13 வயது மனநலம் குன்றிய சிறுமியை கடத்தி தொடர் பாலியல் பலாத்காரம் செய்துவந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-18 16:12 GMT
* காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த ஊனமாஞ்சேரியில், 13 வயது மனநலம் குன்றிய சிறுமியை கடத்தி தொடர் பாலியல் பலாத்காரம் செய்துவந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். காரணைபுதுச்சேரி பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, ஊனமாஞ்சேரியை சேர்ந்த  பரமசிவம், சங்கர்,  சிதம்பரம் ஆகிய மூன்று பேர் கடத்தி சென்று மூன்று மாதங்களாக தொடர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். 

* அங்கிருந்து தப்பித்து வந்த சிறுமி இது குறித்து பெற்றோர்களிடம்  கூறியுள்ளார். பெற்றோர் இது குறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனை அடுத்து  பரமசிவம், சங்கர், சிதம்பரம் ஆகிய மூவரை  போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்