மனநலம் குன்றிய சிறுமியை கடத்தி தொடர் பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த ஊனமாஞ்சேரியில், 13 வயது மனநலம் குன்றிய சிறுமியை கடத்தி தொடர் பாலியல் பலாத்காரம் செய்துவந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
* காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த ஊனமாஞ்சேரியில், 13 வயது மனநலம் குன்றிய சிறுமியை கடத்தி தொடர் பாலியல் பலாத்காரம் செய்துவந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். காரணைபுதுச்சேரி பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, ஊனமாஞ்சேரியை சேர்ந்த பரமசிவம், சங்கர், சிதம்பரம் ஆகிய மூன்று பேர் கடத்தி சென்று மூன்று மாதங்களாக தொடர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
* அங்கிருந்து தப்பித்து வந்த சிறுமி இது குறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளார். பெற்றோர் இது குறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனை அடுத்து பரமசிவம், சங்கர், சிதம்பரம் ஆகிய மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.