குறிப்பிட்ட இடத்தில் விநாயகர் ஊர்வலம் செல்ல தடை : போலீசாருடன் ஹெச்.ராஜா கடும் வாக்குவாதம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2018-09-15 21:27 GMT
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே  உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.. இதில் பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டபோது, குறிப்பிட்ட வழியில் ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக, போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த ஹெச்.ராஜா, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசாரின் தடையையும் மீறி, ஹெச். ராஜா தலைமையில் இந்து முன்னணி மற்றும் பாஜக உறுப்பினர்கள், ஊர்வலம் சென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்