பிரபல மருத்துவரின் மகனால் ஏற்பட்ட விபத்து - 5 பேர் காயம்

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே சித்தார்த் என்ற இளைஞர் சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி மோதியதில் நடைமேடையில் நின்றிருந்த 5 பேர் காயமடைந்துள்ளனர்.

Update: 2018-09-14 02:40 GMT
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே சித்தார்த் என்ற இளைஞர் சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி மோதியதில் நடைமேடையில் நின்றிருந்த 5 பேர் காயமடைந்துள்ளனர். 3 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது. இளைஞரை பொதுமக்கள் சிறைபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் தூக்கமின்மை காரணமாக மோதியதாக தெரிய வந்துள்ளது. இவர் மீது அதிவேகமாக  வாகனம் ஓட்டுவது மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது என்ற இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறிது நேரத்தில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இவர் பிரபல குழந்தையின்மை மருத்துவர் காமராஜின் மகன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்