தமிழகத்தில் யாருக்கும் எலிக்காய்ச்சல் பாதிப்பில்லை - ராதா கிருஷ்ணன்

தமிழகத்தில் யாருக்கும் எலிக்காய்ச்சல் பாதிப்பில்லை என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தந்தி டிவிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியை தற்போது பார்க்கலாம்...

Update: 2018-09-11 11:47 GMT
தமிழகத்தில் யாருக்கும் எலிக்காய்ச்சல் பாதிப்பில்லை என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொற்று நோய்கள் கட்டுக்குள் உள்ளன எனவும், எலிக்காய்ச்சல் எலிகளால் மட்டும் வருவதில்லை எனவும், வெற்று காலுடன் சேற்றில் இறங்கினால் எலிக்காய்ச்சல் வரும் எனவும், தொடர்ந்து கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கிறோம்.மேலும் எலிக்காய்ச்சலுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் எனவும், எலிக்காய்ச்சலுக்கு தேவையான மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன எனவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்