போலீசாருக்கு மிரட்டல் விடுத்த புல்லட் நாகராஜன் கைது

போலீசாரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள ரவுடி புல்லட் நாகராஜன், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

Update: 2018-09-11 03:00 GMT
* தேனி பெரியகுளத்தை அடுத்த மேல்மங்கலத்தைச் சேர்ந்த புல்லட் நாகராஜன் என்ற ரவுடி, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு, வாட்ஸ்-அப் ஆடியோ மூலம் கொலை மிரட்டல் விடுத்திருந்தான். முடிந்தால் தன்னை கைது செய்து பாருங்கள் என போலீசாருக்கு சவாலும் விடுத்திருந்தான். இந்தநிலையில், நேற்று பெரியகுளம் தென்கரை பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார்,  புல்லட் நாகராஜனை அதிரடியாக  கைது செய்தனர். 

* அவனிடம் இருந்து கத்தி, 2 போலித்துப்பாக்கிகள், குழந்தைகள் விளையாட பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.  பின்னர், மேல்மங்கலத்தில் உள்ள அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற போலீசார் அங்கும் தீவிர சோதனை நடத்தினர். 

* பின்னர், புல்லட் நாகராஜன் மீது ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பெரியகுளம் நடுவர் நீதிமன்ற நீதிபதி அருண்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டான். 
அவர், புல்லட் நாகராஜனை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, அவன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். 

Tags:    

மேலும் செய்திகள்