விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பகவத் விநாயகருக்கு பல வண்ணங்களால் ஆன பண அலங்காரம்...
காஞ்சி மகா பெரியவரால் வணங்கப்பட்ட பகவத் விநாயகருக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த பல வண்ணங்களால் ஆன ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 16 ஆம் நூற்றாண்டில் பகவான் முனிவரால் கட்டப்பட்டு, காஞ்சி மகா பெரியவரால் வணங்கப்பட்ட பகவத் விநாயகருக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த பல வண்ணங்களால் ஆன ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆறாம் நாளான நேற்று செய்யப்பட்ட இந்த அலங்காரம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் செய்யப்பட்டு இருந்த அலங்காரத்தை பார்த்து வியந்து, தங்களது செல்போனில் படம்பிடித்துச் சென்றனர்.