அமமுக வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு - மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களுக்கு வலை

காஞ்சிபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வழக்கறிகரை மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர்.

Update: 2018-09-09 20:14 GMT
காஞ்சிபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வழக்கறிகரை மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர் . அங்குள்ள பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த சிவகுமார், கட்சியின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியாக உள்ளார். 

அவர், தனது தந்தையின் பால் விற்பனை கடையில் இருந்தபோது,  இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். தாக்குதலில் படுகாயமடைந்த சிவகுமார், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தப்பிச் சென்ற மர்ம நபர்களை சிவகாஞ்சி போலீசார் தேடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்