7 வயது சிறுமிக்கு பாலியல் துன்பம் அளிக்க முயற்சி - 75 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

விருதுநகர் மாவட்டம், மம்சாபுரம் கிராமத்தில் சிறுமிக்கு பாலியல் துன்பம் அளிக்க முயன்ற 75 வயது முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-07 20:59 GMT
விருதுநகர் மாவட்டம், மம்சாபுரம் கிராமத்தில் சிறுமிக்கு பாலியல் துன்பம் அளிக்க முயன்ற 75 வயது முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். 7 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்து, 20 ரூபாய் பணம் கொடுத்து பாலியல் துன்பம் அளிக்க அவர் முயன்றுள்ளார்.  சிறுமி கூச்சல் போட்டதும், அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து காப்பாற்றியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் போலீசார், மாவட்ட நீதிமன்றத்தில் முதியவரை ஆஜர்படுத்தி, போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்