மூடிஸ் எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்

கோவை மாவட்டம் வால்பாறை மூடிஸ் பஜார் பகுதியில் உள்ள தேவாலயம், ரேசன் மற்றும் மளிகை கடைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன.

Update: 2018-09-06 05:07 GMT
* கோவை மாவட்டம் வால்பாறை மூடிஸ் பஜார் பகுதியில் உள்ள தேவாலயம், ரேசன் மற்றும் மளிகை கடைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன. 

* இதனைத் தொடர்ந்து நல்லமுடி எஸ்டேட் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் அங்கிருந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர் நடத்தி வந்த ரேசன் கடையையும் சேதப்படுத்தி உள்ளது. 

* முத்துமுடி எஸ்டேட்டிலும், பூஞ்சோலை பகுதியிலும் யானைகள் முகாமிட்டு உள்ள நிலையில், காலை மற்றும் இரவு நேரங்களில் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் சென்று வர வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. 

* மேலும், நல்லமுடி பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவேண்டாம் என்றும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்