துவரங்குறிச்சி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

Update: 2018-09-06 01:17 GMT
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

துரைமங்களம் மணியம்பட்டியை சேர்ந்த வெள்ளையன், தமது குடும்பத்தினருடன் , மதுரையில் உள்ள மகன் வீட்டிற்கு காரில் சென்றுள்ளனர். யாகபுரம் அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர். தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறை ரோந்து காவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து, 3 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்